ஆன்மிக செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்
1- கிருஷ்ண ஜெயந்தி விரதமுறை!
*காலை முதல் நள்ளிரவு வரை விரதம் இருத்தல் வேண்டும். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம்.
*கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய் பண்டங்களை நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
*பதினாறு வார்த்தைகள் அடங்கிய ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற மகா மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
*பகவத் கீதை படிக்க வேண்டும்.
*கோவிலுக்குச் சென்று கிருஷ்ணரை பிரார்த்திக்க வேண்டும்.
2- சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்..
அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் போதித்த கீதோபதேசக் கருத்துகள் இங்கு இடம் பெற்றுள்ளன.
*உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டவும், நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் ஒவ்வொரு யுகத்திலும் நான் இந்த பூமியில் மனிதனாக அவதரிக்கிறேன். நீயும் தர்மத்தைக் காக்க துணிந்து நில்.
*எல்லா உயிர்களின் இதயத் தாமரையில் கிருஷ்ணனாகிய நானே வீற்றிருக்கிறேன். எனது சக்திக்கு கட்டுப்பட்டு உயிர்கள் அனைத்தும் பொம்மை போல ஆட்டுவிக்கப்படுகின்றன.
*பச்சிலை, மலர், தண்ணீர் எது வேண்டுமானாலும் அன்புடன் எனக்கு அளித்தால் போதும். அவர்களின் அன்பை ஏற்றுக் கொண்டு அருள்புரிய தயாராக இருக்கிறேன்.
*குரு என்னும் திறமையான மாலுமியும், தெய்வீக அருள் என்னும் காற்றும் சாதகமாக இருந்து விட்டால், பிறவிக்கடலை எளிதாக ஒருவனால் கடந்து விட முடியும்.
*மண்ணில் பிறந்த உயிர்கள் அனைத்தும், என்றாவது ஒருநாள் பிறப்பு, இறப்பு இரு நிலைகளையும் கடந்தே ஆக வேண்டும். இதுவே வாழ்வின் குறிக்கோள்.
*கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி மூலம் ஆன்மிக வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான்.
*மனம் போல போக்கில் மனிதன் வாழ்வது கூடாது. புலன்களுக்கு அடிமைப்பட்டவன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான். பகுத்தறிவால் நன்மை, தீமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
*ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்வது போல, புலன்களை புத்தியால் அடக்க வல்லவன் ஞான நிலையை அடைய முடியும்.
*மனிதப்பிறவி மகத்தானது. அதனால் தேவர்களும் மண்ணில் பிறப்பெடுத்து அன்பு நெறியில் வாழ்ந்து உயர்ந்த ஞானம் அடைய விரும்புகின்றனர்.
*நேர்மை, பணிவு, பொறுமை, சேவை மனப்பான்மை, மனத்தூய்மை, தன்னடக்கம் ஆகிய நற்பண்புகள் அறிவுடையோரின் அடையாளங்களாகும்.
*தேனீக்கள் பல பூக்களில் இருந்து தேனைச் சேகரிப்பது போல மனிதன் பல வழிகளிலும் நற்பண்புகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.
*உணவு, உறக்கம், உழைப்பு அனைத்திலும் மிதமாக இருப்பவனே சிறந்த மனிதன். அடங்காத முரட்டுக் குதிரையான மனதை அடக்கும் வல்லமை அவனிடம் மட்டுமே இருக்கும்.
*வேலையின்றி கணப்பொழுதும் சும்மா இருக்க கூடாது. அவரவர் கடமையைச் சரிவர செய்ய வேண்டும். செயலற்று இருந்தால் உடலைப் பராமரிப்பது கூட சிரமமாகி விடும்.
*செய்யும் கடமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், பலனைப் பற்றிய சிந்தனை உண்டாகாது. அப்போது தான் மனிதன் சுதந்திரமாக வாழ முடியும்.
*அளவான பேச்சும், உணவில் கட்டுப்பாடும் இருந்து விட்டால் மனிதன் தன்னை அறியும் அறிவைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வான்.
*நாடாளும் மன்னராக இருந்தாலும் பெரியவர்களைக் கண்டால் வணங்குவது அவசியம். மனப்பூர்வமாக பெரியவர்களுக்குச் சேவை செய்தால் அகந்தையை வெல்ல முடியும்.
*கொழுந்து விட்டு எரியும் தீ, கட்டைகளை எரித்து சாம்பலாக்குவது போல என்னிடம் முழுமையாகச் சரணடைந்தால் பாவம் அனைத்தும் முற்றிலும் அழிந்து போகும்.
3- வசுதேவர் – தேவகி பொருள் என்ன?
கிருஷ்ணரை பெற்ற தந்தை வசுதேவர். வசு என்ற சொல்லுக்கு எங்கும் பரவியிருப்பது என்று பொருள். எங்கும் பரவியிருக்கும் தேவனான கிருஷ்ணரைப் பெற்றதால் அவர் வசுதேவர் என பெயர் பெற்றார். கிருஷ்ணரின் தாய் தேவகி. இதற்கு தெய்வீகம் எனப்பொருள். ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்ததால் இந்தப் பெயர் பெற்றாள்.
4- விடாக்கண்டன் கொடாக்கண்டன்!
அவரவர் கருத்தில் உறுதியாக நிற்பவர்களை விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்பார்கள். பாரதப்போரில் கிருஷ்ணரும், அர்ஜுனனும் இப்படி பேசிக்கொண்டனர். தன் எதிரே நிற்கும் பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட குருமார்களையும், உறவினர்களையும் எதிர்த்து போராட முடியாது என அர்ஜுனன் கிருஷ்ணரிடம் சொல்லி விட்டான். அப்படியானால் உன் பெயரான விஜயன் (வெற்றியாளன்) என்பதை இழக்க வேண்டி வருமே என்றார் கிருஷ்ணன். போனால் போகட்டும் என்ற அர்ஜுனனிடம், “அப்படியானால் நீ இழந்த நாட்டை மீட்க முடியாது. உன் சுகமெல்லாம் போய் விடுமே! என்றதும், அதுவும் போகட்டும் என்றான் அர்ஜுனன். தன் வழிக்கு வராத அர்ஜுனனிடம்,“சரி...உன் சகோதரர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமே! என்று கிருஷ்ணர் சொல்லவும், “எங்களுக்குள் அப்படி கருத்து வேறுபாடே வராது. நான் சொல்வதை மற்றவர்கள் நிச்சயம் ஏற்பார்கள், என்றான் அர்ஜுனன். சரி...நீ என்ன தான் சொல்ல வருகிறாய்? என்று கிருஷ்ணன் கேட்கவும், “நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உனக்கு தெரியாதாக்கும். சரியான ஆளாக இருக்கிறாயே! என் மனதில் மட்டுமல்ல...ஊரில் எல்லார் மனதிலும் என்ன இருக்கிறது என்று அறிந்த நீயா இவ்வளவு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்று மடக்கி விட்டான் அர்ஜுனன். ஆம்...எல்லாம் அறிந்த கிருஷ்ணர் நம் மனதில் இருப்பதையும் அறிவார். அதனால் நாம் நல்லதையே நினைப்போம்.
ஆஹா ஸ்ரீ (கோபால) கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலா?
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.
பொறுமையாகப் படித்துவிட்டு மீண்டும் பிறகு வருவேன். ஜாக்கிரதை ! :)
//*பதினாறு வார்த்தைகள் அடங்கிய ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற மகா மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.//
ReplyDeleteஆகட்டும் குழந்தாய். அப்படியே செய்து விடுகிறேன்.
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!
//கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய் பண்டங்களை நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.//
ReplyDeleteகுழந்தைகளுக்கு வழங்கினால் மட்டும் போதாது. உப்புச்சீடை, வெல்லச்சீடை, முறுக்குகள், தேன்குழல், முள்ளுத் தேன்குழல், தட்டை + ரவா லாடு போன்ற பல்வேறு இனிப்பு வகைகள் பலவும் செய்து ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்வதோடு மட்டுமல்லாமல், கோபாலகிருஷ்ணன் என்ற பெயருடையவர்களுக்குச் சுடச்சுட அனுப்பி வைக்க வேண்டுமாக்கும். :)))))
//சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்..//
ReplyDeleteமேலே சொல்லியுள்ளவைகளை சொன்னவனும் சொல்பவனும் இந்த கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணனே என்பதை மறக்க வேண்டாம்.
>>>>>
2- சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்..
ReplyDeleteபகுதியில் தாங்கள் எழுதியுள்ள அனைத்துமே அருமையோ அருமை. நிறுத்தி நிதானமாகப் படித்து ரஸித்து மகிழ்ந்தேன்.
//*கொழுந்து விட்டு எரியும் தீ, கட்டைகளை எரித்து சாம்பலாக்குவது போல என்னிடம் முழுமையாகச் சரணடைந்தால் பாவம் அனைத்தும் முற்றிலும் அழிந்து போகும்.//
நானும் இப்போது டோட்டல் சரணாகதி அடைந்து விட்டேன்.
>>>>>
வசுதேவர் – தேவகி பொருள் விளக்கம் அறிந்துகொண்டோம். மிக்க மகிழ்ச்சி. ஸ்ரீ கிருஷ்ணனின் பால்ய வயதுக் கதைகளையெல்லாம் கேட்கக் கேட்க மனதுக்கு பரம சந்தோஷமாகவே இருக்கும்.
ReplyDelete//எல்லாம் அறிந்த கிருஷ்ணர் நம் மனதில் இருப்பதையும் அறிவார். அதனால் நாம் நல்லதையே நினைப்போம்.//
ReplyDeleteநாமும் நல்லதையே நினைப்போம். நமக்கும் நல்லதே நடக்கட்டும்.
பயனுள்ள பகிர்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள். வாழ்க !
இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.
கோபு..பெரிப்பா.. ரசித்து படித்து கருத்துகள் சொன்னதுக்கு நன்றிகள்.. பதிவு ரொம் பெரிசா போயிடுத்தோ....
ReplyDeletehappy 25 August 2016 at 22:37
ReplyDelete//கோபு..பெரிப்பா..//
ஆஹா, என் வாழ்க்கையில் என்னை அன்புடன் ‘கோபு பெரிப்பா’ என்று அழைத்துள்ள முதல் குழந்தை நீ மட்டுமே. ஹாப்பியோ ஹாப்பியாக உள்ளதும்மா. :)
//ரசித்து படித்து கருத்துகள் சொன்னதுக்கு நன்றிகள்..//
மிகவும் சந்தோஷம். :)
//பதிவு ரொம்ப பெரிசா போயிடுத்தோ....//
எனக்கு எதுவுமே ரொம்பப் பெரிசா இருந்தாத்தான் பிடிக்கும். மோத முழங்க கும்முன்னு, ஜிம்முன்னு முரட்டு லட்டு போல இருக்கணும். காய்ஞ்ச கருவேப்பிலை மாதிரி சுருங்கி, சுருண்டு, வற்றிப்போய் இருக்கக் கூடாது.
அதனால் உன் இந்த முரட்டுப் பதிவும் எனக்கு ரொம்பப் பிடிச்சி போயிடுச்சு.
என் பதிவுகளில் பலவும் இதை விட மஹா முரடாகத்தான் இருக்குமாக்கும்.
அப்பிடின்னா சரி.. புக் படிச்சிண்டே டைப் பண்றேனில்லயா சுவாரசயத்தில் பதிவு பெரிசாயிடுத்துன்னே தெரியல..
ReplyDeleteஇருப்பினும் என் அனுபவத்தில் ஒன்று சொல்கிறேன்.
Deleteமிக நீண்ட பெரிய பதிவுகளை யாரும் அவ்வளவாக சிரத்தையாகப் படித்து பின்னூட்டங்கள் கொடுக்க விரும்புவது இல்லை.
ஷார்ட் + ஸ்வீட் டாக உள்ள மிகச்சிறிய பதிவுகளைப் படிக்கவே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.
மேலும் ’ஷார்ட் அண்ட் ஸ்வீட்’ ஆகக் கொடுப்பதால் உன் பதிவுகளின் எண்ணிக்கை கூடும் இலாபமும் உனக்கு உண்டு.
மிக நீண்ட பதிவாக இருந்தால் ’தொடரும்’ போட்டு சின்னச் சின்னப்பகுதிகளாகப் பிரித்தும் கொடுக்கலாம்.
’யதா செளகர்யம்’ என்று சொல்லுவார்கள். அதுபோல உன் செளகர்யம் எப்படியோ அதன்படியே செய்யவும்.
வாழ்த்துகள்.
சரி கோபு பெரிப்பா... கவனத்தில் வச்சுக்கறேன்
ReplyDeleteஇன்னிக்கு இந்த பதிவில் படம் இணைச்சிருக்கேன். உங்களுக்கு சரியா வரதா...
ReplyDeleteஇன்னிக்கு இந்த பதிவில் படம் இணைச்சிருக்கேன். உங்களுக்கு சரியா வரதா...
ReplyDeleteபசுமாடு + மயிலுடன் பில்லாங்குழல் ஊதும் கண்ணன் படம் கண்டு களித்தேன். சரியா வந்துடுச்சு. வெரி குட். தேங்க்யூடா செல்லம்.
Deleteவரலஷ்மி படம் இணைக்க போயி காபி காணாமபோச்சே.அதுவும் இணைக்க முடியல
ReplyDeletehappy
ReplyDelete//வரலஷ்மி படம் இணைக்க போயி காபி காணாமபோச்சே.அதுவும் இணைக்க முடியல//
பரவாயில்லை. சிரமப்படாதீங்கோ. எதையாவது இணைக்கப்போய், கஷ்டப்பட்டு எழுதி வெளியிட்டுள்ள பதிவே சமயத்தில் காணாமல் போய்விடும் ஆபத்தும் இதில் உண்டு. ஜாக்கிரதை !
புதிய பதிவு வெளியிடும்போது மட்டும், முதலில் படத்தைத் தேடி இணைத்துவிட்டு, பிறகு அதன் கீழேயே ட்ராஃப்ட் எழுத முயற்சி செய்யுங்கோ. ட்ராஃப்டை அடிக்கடி ஸேவ் செய்துகொள்ளவும்.
[ ஸேவ் = SAVE ....... ஷேவ் SHAVE அல்ல :) ]
கோபு பெரிப்பா..நீங்க என்னை வாங்கோ போங்கோனு எதுக்கு சொல்றேள்.. சங்கடமா இருக்கே..
ReplyDeletehappy
Delete//கோபு பெரிப்பா..நீங்க என்னை வாங்கோ போங்கோனு எதுக்கு சொல்றேள்.. சங்கடமா இருக்கே..//
ஸாரிடா .... செல்லம். ஏதோ ஒரு பழக்க தோஷம், மற்றவர்களுக்கு எழுதுவதுபோல எழுத நேரிட்டு விட்டது.
இனி கொஞ்சம் கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்மா குழந்தே. நீ என்னால் சங்கடப்படவே கூடாதூஊஊஊஊஊ.